வீரப்பூர்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ளது வீரப்பூர். வீரப்பூரில் பொன்னர் சங்கர் என்னும் உலக புகழ் வாய்ந்த அண்ணமார் சுவாமிகள் எனப்படும் பொன்னர் சங்கர் கோவில் உள்ளது.இந்த கதை நடந்த இடமான வீரப்பூரில் வருடந்தோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறும். இந்த விழா 7 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழா புகழ் வாய்ந்தது.இந்த விழாவிற்கு வரும் மக்கள் விழா நாளான 7 நாள்களும் அங்கேயே தங்கி இருப்பர். இந்த கோவில் அங்குள்ள பெரியக்காண்டியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ளது.அதற்கு அருகில் காவல் தெய்வமாய் பிரமாண்டமான உயரத்தில் மிரட்டும் விழிகளுடன் இருக்கும் மந்திரம் காத்த மகாமுனி சிலை காளை மாட்டுடன் கூடிய சாம்புவன் சிலை உள்ளது. வீரப்பூர் அருகே வீரமலை என்னும் மலை உள்ளது. இந்த மலை மீது தவசு கம்பம் என்னும் ஒரு இடம் உள்ளது இந்த இடத்தில் தான் பெரியக்காண்டியம்மன் தவம் செய்ததாக கூறப்படுகிறது.
வீரமலையின் ஒரு பகுதியில் கூவனாம்பள்ளம் என்ற ஒரு இடம் உள்ளது இந்த இடத்தில் தான் வீரப்போர் நடந்தது என்று கூறப்படுகிறது. அண்ணமார் சுவாமி கதையில் வரும் படுகளம் காட்டு கோவில் இங்கு தான் உள்ளது.
வரலாறு
முழு கதையை படிக்க இங்கே
கிளிக் செய்யவும் (Ref:http://ponnivala.blogspot.com/2014/08/blog-post_38.html)
No comments:
Post a Comment