Translate

Wednesday 24 August 2016

சதுரகிரி மலை - சுந்தர மகாலிங்கம்

சதுரகிரி மலை 


திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.

செல்லும் வழி :


1. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துல இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்சில் செல்ல வேண்டும் தாணிப்பாறை ஆரம்பத்தில்  இறங்க வேண்டும். அங்கிருந்து 7 கி.மீ., தூரத்தில் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை உள்ளது . சதுரகிரி மலை அடிவாரத்தில் இருந்து 10 கி.மீ. மலை ஏறினால் சுந்தர மஹாலிங்கம் கோவில் வரும் .


 2.மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழியாக செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி வேண்டும் . அங்கிருந்து வத்திராயிருப்பு செல்ல அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. வத்திராயிருப்பு யிலிருந்து தாணிப் பாறைக்கு மினிபஸ் அல்லது ஆட்டோவில் செல்லலாம் .

கோவில் திறந்து இருக்கும் நேரம்  :


 சுந்தர மஹாலிங்கம் கோவில் காலை 6 - 12 மணி, மாலை 4-9 மணி திறந்து இருக்கும் . விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.

உணவு :


 மலைக்கு மேலே   கஞ்சி மடம்  உள்ளது. உங்களுக்கு 24 மணி நேரமும் உணவு  கிடைக்கும் .

கோவில் சிறப்புகள்:


 மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை  சஞ்சீவி மலை  என்கின்றனர்.

 சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும்   கூட்டம் இருக்கும்.

பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.

இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை பயன்படுத்தி உள்ளனர்

 மகாலிங்கம் கோயிலின் வடக்கே  ஊஞ்சல் கருப்பண சாமி  கோயில் உள்ளது.

 சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.

 ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.

 சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.

வரலாறு :



சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.

சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும்.தாணிப்பாறை தான் சதுரகிரி மலை அடிவாரம் இங்கு தான் பிலாவடி கருப்பர் கோவில் உள்ளது.

மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.


பிலாவடி கருப்பு:


வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார். வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார்.


அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார்.

இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.

 இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம்.

அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.

இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது.

இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி. கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.

 இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள்.

 பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.

 இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.

 ""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

பெரிய மகாலிங்கம்:


நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

 தவசிப்பாறை:


மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம்.

பாறைக்கு செல்லும் வழியில் மஞ்சள் ஊத்து தீர்த்தம் உள்ளது.தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது.

 மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும்.

தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் வெள்ளைப்பிள்ளையார் பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.

சுந்தரமூர்த்தி:


கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர்.

சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

பார்வதி பூஜித்த லிங்கம் :


சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது.

பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர். இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது.

செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.

லிங்க வடிவ அம்பிகை


சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது.

நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

சதுரகிரியில் தீர்த்தங்கள்


சந்திர தீர்த்தம்

சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.

கெளண்டின்னிய தீர்த்தம்

சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு.

சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.

இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும். இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.

இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு. காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக் காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது.

இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.

பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.

அபூர்வ மூலிகைகள் :


இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.

சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது. இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.

அதேபோல் ஏர் அழிஞ்ச மரம் என்றொரு மரம் உண்டு. இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும். இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.

இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.

மலையில் மிக அடர்ந்த பகுதியில் - மதி மயக்கி வனம் என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.

இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன.

இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.

sourcer: http://prapu.blogspot.in/2012/03/blog-post_22.html

Friday 19 August 2016

வெங்காயம் - onion

வெங்காயத்தின் மருத்துவ பயன்கள்


வெங்காயம் எல்லாரும் திட்டும் போது போடா வெங்காயம்ன்னு திட்டுவாங்க ஏன்னா இதை கடைசி வரை உரித்தால் கடைசில ஒன்னும் இருக்காது அதான்.

வெங்காயம் - onion

 ஆனா வெங்காயம் மருத்துவ குணம் உடையது. தன்னை உரிப்பவரை அழவைத்தாலும் யாருக்கும் தீமை செய்யாதது . அதிலும் சின்ன வெங்காயம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

 குண்டாக இருப்பவர்கள் உடம்பு இளைக்க வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.


 நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.


 சம அளவு வெங்காயச் சாறு வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி குறையும்.


 வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும்சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.


வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவசம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.


 வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.


வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.


வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.

 இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நினைத்து பல் ஈறுகளில் தடவிர பல்வலி, ஈறுவலி குறையும்.


வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும்.


 மூலச்சூடு தணியும்.

 வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.


 வெங்காயத்தை வதக்கி வெறும், வயிற்றில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.


 வெங்காயத்தை வதக்கி தேன்விட்டு இரவில் சாப்பிட்டு பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.


 படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை  பூசினால் மறைந்துவிடும்.

 திடீரென மூர்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.


 வெங்காயச் சசாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும். பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.


 வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.


 வெங்காய் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது- எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும்.


 பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.


 வெங்காய்ம வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது ஜீரணத்துககும் உதவுகிறது. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.


தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.


வெங்காயச் சாற்றுடன் கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிர வலி குணமாகும்.

 நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.


 வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

வெங்காயச் சாறயும், தேனையும் சம அளவு கலந்து கண் வலிக்கு ஒரு சொட்டு விட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.


வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.


 பாம்பு கடித்து விட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்ன வேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும்.  பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.


காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.


ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்ட்ட நோய் குறையும்.


சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.


தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்து வர முடிவளரும்.


 காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.


வெங்காயத்தை தினமும் சாப்பிட்ட வர டி.பி. நோய் குறையும்.


வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.


தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.


வெங்காயத்தை சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.


வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.


தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்


வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விள்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.


 வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப்போட தலைவலி குறையும்.


மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.


 சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.


வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.


source : http://www.darulsafa.com/Health/onion.htm

Wednesday 17 August 2016

கற்றாழை - Alo- vera


கற்றாழை - Alo- vera

கற்றாழை கடவுள் தந்த பொக்கிஷம் . பல நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணம் கற்றாழையில் உள்ளது.கற்றாழை உடல் அழகிற்கு மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது. 


 கற்றாழை வறண்ட பகுதியில் அதிகம் காணப்படும். இதில் சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை என பல வகை உண்டு.


கற்றாழை


இதை இங்கிலீஷில் அலோ-வேற என்று சொல்லுவார்கள்.


 கற்றாழையில் தண்ணீர் சத்து அதிகம் உள்ளது. அதில் இருக்கும் கொழகொழப்பான தன்மை ‘கிளைக்கோ புரோட்டின்’ என்ற ஒரு வகை புரதத்தால் உண்டாகிறது. இந்த புரதம் வலிகளையும், வீக்கத்தையும் நீக்கும் சக்தி வாய்ந்தது. 


 கற்றாழையில் உள்ள சர்க்கரை சத்துகள் உடல் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சருமத்தை மென்மையாக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புது செல்களை உருவாக்கும். 

 கற்றாழை நாம் பயன்படுத்தும் அழகுசாதன பொருள்களிலும் , மருந்துகளிலும் உள்ளது. 


 கோடைக்காலத்தில் சருமத்தில் தோன்றும் வியர்க்குரு, அரிப்பு மற்றும் தேமல்களுக்கு கற்றாழை மருந்தாகிறது. அதில் இருக்கும் கொழகொழப்பான புரதப்பகுதியை எடுத்து, சருமத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும்.


 தோலில் உண்டாகும் சோரியாஸிஸ் நோய்க்கு கற்றாழையின் தசைப் பகுதியை எடுத்து, தினமும் பூசி அரை மணி நேரம் வைத்திருக்கவேண்டும். கற்றாழையில் உள்ள நீர் சத்தை சருமம் வேகமாக உள்ளிழுத்துக் கொள்ளும். அதனால் சருமத்தில் ஈரப்பதம் அதிகரித்து, சருமம் மென்மையடையும்.


 கற்றாழை தசைப் பகுதியை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும். முகசுருக்கம் நீங்கும். கரும்புள்ளிகள் அகலும். வெயிலில் செல்வதால் முகத்தில் உண்டாகும் நிறமாற்றங் களும் சீராகும்.


 தீக் காயங்களில் கற்றாழை தசைப் பகுதியை வைத்துகட்டினால் புண்கள் விரைவாக ஆறும். கற்றாழையில் உள்ள புரதம், சருமம் நார்திசுக்களை உற்பத்தி செய்யவும் துணைபுரியும். கற்றாழை மேல்தோலை நீக்கிவிட்டு, அதன் தசைப் பகுதியை எடுத்து தண்ணீரில் ஐந்து முறை நன்கு கழுவி 30 கிராம் அளவு தினமும் சாப்பிட்டு வரவேண்டும். சாப்பிட்டால் உடல் சூடு நீங்கும். மலச்சிக்கல் தீரும். 


மூலநோய்கள் மற்றும் மூலத்தில் உள்ள சூடு கட்டுப்படும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளில் நிவாரணம் கிடைக்கும். வயிற்றுப் புண் கட்டுப்படும். உடலில் உள்ள சர்க்கரையின் அளவும், கெட்ட கொழுப்பின் அளவும் குறையும். மலச்சிக்கல் உள்ளவர்கள் கற்றாழை சோற்றை 50 கிராம் அளவு சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.


 கோடைக்காலத்தில் வைரஸ் கிருமிகளின் தாக்கத்தால் கண் வீக்கம், கண்சிவப்பு, கண்எரிச்சல் போன்றவை ஏற்படும். இதற்கு கற்றாழையின் தசைப் பகுதியில் படிகார தூள் தூவி, கண்களை மூடிக்கொண்டு கண்களில் வைத்துக் கட்டவேண்டும். வலி, வீக்கம், எரிச்சல் நீங்கும். கற்றாழை கூந்தல் தைலம் தயாரிப்பதற்கும், உடல் அழகுக்கு பயன்படுத்தும் பல்வேறு கிரீம் வகைகள் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.  



கற்றாழை தேங்காய் எண்ணெய் : 


உங்களுக்கு தலை முடி கொட்டுகிறதா ? முடி உதிர்கிறதா ? தலையில் பூச்சி வெட்டு உள்ளதா? கவலை வேண்டாம்,


 எங்களிடம் மூலிகை தேங்காய் எண்ணெய் உள்ளது . இதை தினமும் தலையில் தேய்த்தால் முடி உதிராது , தலையில் பூச்சி வெட்டு வராது. 




 இதில் எந்த வித கெமிக்கல் இல்லை . இதில் கற்றாழை, வெந்தயம்  கலந்து உள்ளது . இயற்கையான முறையில் செய்தது , இது ஒரு homemade product ஆகும்.

Contact: P.saravanan (haarish.saravanan@gmail.com)


 கற்றாழையை இதய நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் பயன்படுத்த கூடாது. தீக் காயங்களுக்கு சிறந்த முதல் உதவி மருந்து, கற்றாழை. இதனை மிக எளிதாக வீடுகளில் சிறு தொட்டிகளில் வளர்க்கலாம். கற்றாழையை மருந்தாக மட்டுமின்றி, உணவாகவும் சாப்பிடலாம்.


 கூட்டு


 கற்றாழை – 2 மடல் 

 பெ. வெங்காயம் – 1 (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)

 தக்காளி – 1 

 இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி 

 மிளகாய் – 2 

 மிளகு பொடி – ½ தேக்கரண்டி

 தனியா பொடி – 1 தேக்கரண்டி

 மஞ்சள் பொடி – ½ தேக்கரண்டி 

 உப்பு – தேவைக்கு 


 வறுத்து அரைக்க: 


 சீரகம் – 1 தேக்கரண்டி

 பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி 

 கசகசா – 1 தேக்கரண்டி

 மிளகு – ½ தேக்கரண்டி

 கிராம்பு – 3

 ஏலக்காய் – 3

 பட்டை – சிறுதுண்டு

 வேர்கடலை பருப்பு – 2 தேக்கரண்டி

 தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி

 காய்ந்த மிளகாய் – 2 


 தாளிக்க: 


கடுகு – 1 தேக்கரண்டி

 உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி 

 நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி 


 செய்முறை: 


கற்றாழையை தோல் சீவி அதன் தசைப் பகுதியை எடுத்து நீரில் கழுவி, வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் அரைப்பதற்கான பொருட்களை இட்டு லேசாக வறுத்து பொடி செய்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிவைத்திருக்கும் வெங்காயத்தை கொட்டுங்கள். தக்காளி, மிளகாய் போன்றவைகளை நறுக்கிப்போட்டு தாளியுங்கள்.

 

மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி போன்றவைகளை கொட்டி நன்றாக கிளறுங்கள். அதில் வேக வைத்துள்ள கற்றாழை துண்டுகள், அரைத்து வைத்திருக்கும் மசாலா பொருட்கள், உப்பு போன்றவைகளை சேருங்கள். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். இதை சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம். ராஜஸ்தான் மாநிலத்தில் இது பிரபலமான உணவாகும்.


 ஜாம்


 கற்றாழை தசைப் பகுதி துண்டுகள் – 250 கிராம்

 சர்க்கரை – 200 கிராம்

 சாரைப் பருப்பு – 10 கிராம் 

 வெள்ளரி விதை – 10 கிராம் 

 பாதாம் பருப்பு – 10 கிராம் 

 பிஸ்தா பருப்பு – 10 கிராம்

 நீர்முள்ளி விதை – 10 கிராம்

 சலாமிசிறி – 10 கிராம் 

 ஜாதிக்காய் – 5 

 நெய் – 50 மி.லி 


 செய்முறை:


கற்றாழை துண்டுகளை மிக்சியில் இட்டு ஒரு சுற்று அரைத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளை தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் சர்க்கரையை கொட்டி சிறிது நீர் சேர்த்து பாகு ஆக்கவும். பதத்திற்கு வந்ததும் அரைத்து வைத்துள்ள கற்றாழையை சேர்த்து கிளறவும். பின்பு பொடித்து வைத்துள்ள பருப்பு வகைகளை கலந்து கிளறி, நெய் சேர்க்கவும். 


நன்றாக கிளறிவிட்டு, பாத்திரத்தில் ஒட்டாத நிலைக்கு வரும்போது அடுப்பை அணைத்து விடவும். ஆறிய பின்பு இதனை கண்ணாடி பாட்டில்களில் அடைத்துவைத்து பயன்படுத்தவும். இதை காலை, இரவு 1 தேக்கரண்டி வீதம் இளம் பெண்கள் உண்டு வந்தால், மாதவிடாய் தொடர்புடைய கோளாறுகள் நீங்கும். கருப்பை கோளாறு உடையவர்களும், குழந்தைப் பேறு இல்லாதவர்களும் இதை சாப்பிட்டுவரலாம்.


 (குறிப்பு: நீர் முள்ளிவிதை மற்றும் சலாமிசிறி போன்றவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) 


 தைலம்


கற்றாழை தசை – 300 கிராம் 

 விளக்கெண்ணெய் – 300 மி.லி

 வெந்தயம் – 50 கிராம்

 சீரகம் – 50 கிராம்

 சிறிய வெங்காயம் – 100 கிராம் 

 பனங்கற்கண்டு – 200 கிராம்


 செய்முறை: 


கற்றாழையை துண்டுகளாக்கி, சிறிய வெங்காயத்துடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெந்தயம் மற்றும் சீரகத்தை லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் விளக்கெண்ணெய்யை ஊற்றி சற்று சூடானதும் அரைத்த கற்றாழை கலவையையும், பொடி வகைகளையும் சேர்த்து மிதமாக அடுப்பை எரியவைத்து கிளறி விட்டுக்கொண்டே இருக்கவேண்டும். 


நன்கு வெந்து வரும்போது பனங்கற்கண்டை கலந்து கிளறவேண்டும். ஆறிய பின்பு பாட்டிலில் அடைத்துவைத்துக்கொள்ளவும். இதை 10 கிராம் (2 தேக்கரண்டி) வீதம் காலை, மாலை உணவிற்கு பின்பு சாப்பிட்டு வரலாம். மூலநோய், மூலநோய் எரிச்சல், ஆசன வெடிப்பு, வயிற்று வலி, மலகட்டு, குடல் பூச்சிகளால் ஏற்படும் வயிற்று வலி போன்றவை நீங்கும். மலச்சிக்கல் இல்லாதவர்கள் இரவு ஒரு வேளை உண்டால் போதும்.


 சாறு:


 கற்றாழை மடல் – 1 

 தண்ணீர் – 1 லிட்டர் 

 எலுமிச்சைசாறு – 1 தேக்கரண்டி 

 சர்க்கரை – தேவைக்கு 


 செய்முறை: 


 கற்றாழை தசைப் பகுதியை எடுத்து நன்றாக கழுவி, மிக்சியில் அரைத்து அதில் சர்க்கரையை சேருங்கள். சுவைக்கு தக்கபடி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இந்த சாறு 100 மி.லி. வரை அருந்தலாம். வயிற்று புண், வாய்புண், சரும நோய் மற்றும் மாதவிடாய் கோளாறுகளை இது சரி செய்யும்.




Reference Source: Dailythanthi


ஆவாரம் பூ

ஆவாரம் பூ 


ஆவாரம் பூ ஒரு மருந்து மலர், இதை ஒரு டாக்டர் என்று கூட சொல்லாம். அந்த அளவுக்கு மருத்துவ குணம் இதில் உண்டு. முன்பு கிராமத்தில் காட்டில் ஆவாரம்பூ பூத்துக் கிடக்கும். இந்த பூ கிட்டத்தட்ட அழிந்து விட்டது.


ஆவரம் பூ


 

ஆவாரம் பூ மருத்துவ பயன்கள் : 


உடல் சூடு உள்ளவர்கள் ஆவாரம் பூ கஷாயம் குடித்தால் உடல் சூடு குறையும். ஆவாரம் பூவை காய வைத்து பொடி செய்து  அந்த  பொடியை நீருடன் கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தினால் உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண், வயிற்றுப்புண்,வெள்ளைப் படுத்தல் போன்றவை குணமாகும் , மேலும் இந்த பூ  இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்ச தன்மை கொண்டது .  உடலுக்கு சக்தி தரும், நாவறட்சி போக்கும்.


  ஆவரம் பூவை பாசிப்பயறு உடன் சேர்த்து அரைத்து குளித்தால் உடம்பில் உள்ள துர்நாற்றம் நீங்கும் . உடம்பு நிறம் கொடுக்கும்.
  ஆவாரம் பூவையும் அதன்  கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷாயம் இறக்கி பால் சேர்த்து பருகிவந்தால் நீரிழிவு நோய் குறையும்.


 ஆவாரம் பூவை  பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு போல்  சமைத்து சாப்பிட்டால்  சர்க்கரை நோய் குறையும்.


ஆவரம் பூவை  பொடி செய்து, அதனுடன் அதே அளவு அருகம் புல்லை வேருடன் சேகரித்து சுத்தம் செய்து இடித்து சூரணம் செய்து இரண்டு தூளையும் ஒன்றாய் கலந்து ஒரு சீசாவில் போட்டு வைக்கவும். தினமும் காலை, மாலை, அரைத்தேக்கரண்டியளவு பசு நெய் சேர்த்துக் குழைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமடையும்.

தலை முடி கொட்டாமல் இருக்க ஆவாரம் பூ  , ரோஜா இதழ்,சீகைக்காய்  இத மூன்றையும் சேர்த்து நன்றாக காய வைத்து பொடி செய்து ஷாம்பு க்கு பதில்  இதை தலைக்கு தேய்த்து குளித்தால் முடி கொட்டாது.

Tuesday 16 August 2016

பிரண்டை

பிரண்டைக்கு வஜ்ரவல்லி, சஞ்சீவி, உத்தன பெயர்களும் உள்ளது .


முன்பு கிராமத்தில் வேலி எங்கும் இந்த பிர‌ண்டை காணப்படும், ‌இப்போது கிடைப்பது அ‌ரிது. பிர‌ண்டை மு‌ற்‌றியதாக இல்லாமல் இருப்பது நல்லது. பிர‌ண்டை‌யி‌ல் கா‌ல்‌சிய‌ம்,கேரா‌ட்டி‌ன் , ‌வை‌ட்ட‌மி‌ன் ‌சி உள்ளது.

பிர‌ண்டை

‌பிர‌ண்டையை ந‌ன்கு வத‌‌க்‌கி பு‌ளியுட‌ன் சே‌ர்‌த்து சமை‌க்க வே‌ண்டு‌ம். இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் நா‌வி‌ல் அ‌ரி‌ப்பையு‌ம், வ‌யி‌ற்‌‌றி‌ல் எ‌ரி‌ச்சலையு‌ம் ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம்.

பிர‌ண்டை‌யி‌ல் கா‌ல்‌சிய‌ம் அ‌திக‌ம் இரு‌ப்பதா‌ல் எலு‌ம்பு வள‌ர்‌ச்‌‌சி‌க்கு ‌பிர‌ண்டை அ‌திகமாக பய‌ன்படு‌ம். ‌பிர‌ண்டை துவைய‌ல், ‌பிர‌ண்டை வ‌ற்ற‌ல் செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம்.

பிரண்டை, நரம்புத்தளர்ச்சியைப் போக்குகிறது,பிரண்டை உடலைத் தேற்றும், பசியைத் தூண்டும், மாதவிலக்கைத் தூண்டும், மந்தம், குன்மம், இரத்தக் கழிச்சல், அஜீரணம் ஆகியவற்றைக் குணமாக்கும்.

பிரண்டைச் சாறு உடம்பில் பட்டால் அதிகமான அரிப்பும் நமைச்சலும் ஏற்படும். வேர், தண்டு ஆகியவை அதிகமான மருத்துவப் பயனுள்ளவை. தண்டு கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.

பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். இதனையே நாம் பொதுவாக உபயோகிக்கலாம்.

பிரண்டைத் தண்டுகளைச் சேகரித்து, மேல் தோலைச் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு தேவையான அளவு நெய்யில் வதக்கி, தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து அரைக்க வேண்டும். பின்பு கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.

பிரண்டைத் துவையல் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும்.
நன்றாக முற்றிய பிரண்டைத் தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும் இந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும்.

பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் ஒழுங்காக வரும்.

பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும். மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் இது உதவுகிறது.

மேலும் பிரண்டையை நன்கு காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு நீரில் குழைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் பூசி வரலாம்.பிரண்டையின் வேரை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை மாலை வேளைகளில் பத்து கிராம் அளவு சாப்பிட்டு வரவேண்டும். வஜ்ரவல்லி என்கிற பெயர்க் காரணம் உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டையின் குணத்தினாலேயே ஏற்பட்டது.

அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போட வேண்டும்.


Saturday 13 August 2016

Sundaikkai - சுண்டைக்காய்

சுண்டைக்காய் கசப்புடனும் கசப்பு இல்லாமலும் கிடைக்கும்.சுண்டக்காயை மோரில் ஊற வைத்து வத்தலாவும், பச்சை சுண்டைக்காய் குழம்பு வைத்தும் சாப்பிடலாம். சுண்டைக்காய் சாப்பிடுவதால் குடலில் உள்ள புழுக்கள் கூட இறந்து விடும், சர்க்கரைநோய் கூட கட்டுப்படுத்தும்.


சுண்டைக்காய்

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து உள்ளது. இரத்தம் சுத்தமாகும். உடற்சோர்வு நீங்கும்.சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களும் நீங்கும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும். வயிற்றுக் கிருமிகள் அகலும். மலச்சிக்கலைப் போக்கும்,சுண்டைக்காயை அடிக்கடி சாப்பிட்டால் எலும்புகள் பலப்படும், பெண்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்து சுண்டைக்காய் சாப்பிட பழக்க வேண்டும்.

பச்சை சுண்டைக்காய் குழம்பு

சுண்டைக்காய் பொரிச்சக் குழம்பு

Thursday 11 August 2016

வரலட்சுமி விரதம்


வரலட்சுமி  பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை  செய்ய வேண்டும். முக்கியமாக பெண்கள், சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு . திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோ டு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோ த்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.


 விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை,ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.


பூஜைக்குத் தேவையானவை :

 மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.


நிவேதனப் பொருள்கள்:


பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

பழ வகைகள்:

ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை


பூஜைக்கான முன்னேற்பாடுகள்:


வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.


(சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)


பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.


விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் & ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.


பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். பஞ்சாங்கம் பார்த்து, நாள், திதி, வருடம், பட்சம், மாதம் ஆகியவற்றை அறிந்து குறித்துக் கொள்ளவும்.


மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.


Ref: http://www.dinamani.com/religion/2013/08/15/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/article1736033.ece

Refined oil dangerous - ரீஃபைண்டு எண்ணெய் ஆபத்து?

நம் தாத்தா, பாட்டி காலத்தில்  வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய் (ஆமணக்கு எண்ணெய்) என்று பலவிதமான எண்ணெய்கள்   இருந்தன. சமையலுக்கு செக்குல ஆட்டின எண்ணெயைத்தான் பயன்படுத்திட்டு இருந்தாங்க .

இதயத்துக்குப் பாதுகாப்பானது'னு சொல்லி, கொலஸ்ட்ரால் சத்து நீக்கின  ரீஃபைண்டு செய்யப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்,   கடலை எண்ணெய், தவிட்டு எண்ணெய்  , கடுகு எண்ணெய், சோள எண்ணெய், ஆலிவ் எண்ணெய்களும்   வந்துவிட்டன.  

  'ரீஃபைண்டு’   முறையில வர்ற எண்ணெய்கள்ல நமக்குக் கிடைக்கிற நன்மைகளைவிட, இழக்கும் நன்மைகள் அதிகம்! ஒரு எண்ணெயை, வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி பல கட்டங்களா சுத்திகரிக்கும்போது, அதோட தன்மையே மாறிப்போறதோட, சத்தும் நீங்கிடுது. முன்பு நல்லெண்ணெய் தயாரிக்கறதுக்கு செக்கில் எள்ளை ஆட்டும்போது, எள்ளிலிருந்து எண்ணெயைப் பிரிக்கறதுக்காக கருப்பட்டியைச் சேர்த்தாங்க. இப்போ 'எக்ஸெலர்’ங்கற இயந்திரம் மூலமா எண்ணெய் எடுக்கிறாங்க. இதுல கருப்பட்டிக்குப் பதிலா, சர்க்கரை ஆலைக் கழிவைப் பயன்படுத்துறாங்க. இது எண்ணெயோட குணங்களை மாத்திடுது. செக்குல ஆட்டுற எண்ணெயை வடிகட்டும்போது, கசடுகள் மட்டும்தான் நீக்கப்படும். ஆனா, இந்த 'ரீஃபைனிங்’ முறையில கசடுகளோட சேர்ந்து சத்துக்களும் வடிகட்டப்படுது.

மொத்தத்தில், ரீஃபைண்டு எண்ணெய் வகைகள், எண்ணெய்க்கே உரித்தான சத்துக்களை நம்மகிட்ட சேர்க்கிறதில்ல. வியாபார நோக்கத்தோட, 'ரீஃபைண்டு பண்ணாத எண்ணெய்கள் உடலுக்குக் கேடு'னு சொல்லிச் சொல்லியே மக்களைப் பயமுறுத்திட்டாங்க. கொலஸ்ட்ராலுக்குப் பயந்து ரீஃபைண்டு ஆயிலுக்கு மாறினவங்களுக்கு கொலஸ்ட்ரால் குறைஞ்சுடுச்சுனும் சொல்ல முடியாது. அதனால,   செக்கு எண்ணெய் வாங்கிப் பயன்படுத்துறதே சிறந்தது! ஆனால், செக்கு எண்ணெய் எங்கே கிடைக்கும் என்று தேடிக் கண்டுபிடிப்பது சாதாரண காரியமல்ல. எனவே, ரீஃபைண்டு செய்யாத எண்ணெயைப் பயன்படுத்துவதுதான் நல்லது.

ஒரே வகையான எண்ணெயைப் பயன்படுத்துறதைவிட, எல்லா வகை எண்ணெய்களையும் கலந்து பயன்படுத்துறது நல்லது. ஒரே வகையான எண்ணெயைத் தொடர்ந்து எடுத்துக்கும்போது அதிலிருக்கிற கெடுதல் தன்மை உடல்ல சேர்ந்துட்டே இருக்கும். அதனால எண்ணெய்கள்ல இருக்கிற நற்குணங்கள் மட்டுமே உடம்புல சேரணும்னா... எல்லா வகை எண்ணெய்களையும் மாத்தி மாத்தி கொஞ்சமா பயன்படுத்தணும். இதயத்துக்கு நல்லதுங்கிற விளம்பரத்தோட மார்க்கெட்டில் விற்கப்படும் சூரியகாந்தி ரீஃபைண்டு எண்ணெய், சிறுநீரகத்துக்கு நல்லது இல்லை. எந்த எண்ணெயாக இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுங்கிற மாதிரி, ஒரே எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்தினா தீங்கானதுதான். அதனால சமையலுக்கான எண்ணெய் வகையை அடிக்கடி மாத்திக்கிறது நல்லது'' என்றவர்,

''கொழுப்புல தாவர கொழுப்பு, மாமிச கொழுப்புனு ரெண்டு வகை இருக்கு. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற தாவரங்கள் மூலம் எடுக்கக்கூடிய எண்ணெய்கள்ல இருக்கற கொழுப்பு, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது. இந்தக் கொழுப்பு ரத்தக்குழாய்கள்ல நேரடியா படிஞ்சு அதிக பாதிப்பைத் தராது. உதாரணமா, தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்னு பலரும் ஒதுக்கி வைக்கிறாங்க. ஆனா, கேரளாவில் பெரும்பான்மையான மக்கள் தேங்காய் எண்ணெயைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துறாங்க. இதயநோயால் பாதிக்கப்படுபவர்கள் மற்ற மாநிலத்தைவிட, கேரளத்தில் அதிகமாக இல்லைனு ஆய்வுகள் சொல்லுது. இதிலிருந்தே தெரிஞ்சுக்கலாம், நன்மைகள் பலவும் அடங்கியிருக்கிற தேங்காய் எண்ணெயை, உணவில் சேர்க்கக்கூடாதுங்கறது எந்த அளவுக்கு தவறான கருத்துனு! இன்னொரு பக்கம், இறைச்சி, இறால் போன்ற மாமிச உணவுகளாலும் உடல்ல கொழுப்பு சேருது. இதைக் கட்டுப்படுத்தாம, எண்ணெயில் மட்டும் கட்டுப்பாட்டைக் கொண்டு வர்றதுல எந்தப் பயனும் இல்லை.

>   ''கடலை எண்ணெய், உடலுக்குத் தீங்கு தருவதில்லை. அதேசமயம், சுத்திகரிக்காமல் இருக்கும் கடலை எண்ணெயைத் தவிர்ப்பது நல்லது. காரணம், கடலை எண்ணெயின் மூலப்பொருளான கடலை மண்ணுக்குள் விளையும்போது, அதை பூஞ்சைகள் அதிக அளவில் தாக்கும். இப்படிப்பட்ட கடலைகளை நீக்காமல் தயாரிக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்துவது பிரச்னை தரவே செய்யும். எனவே, சுத்தமான கடலை எண்ணெயே நல்லது. ரீஃபைண்டு செய்யாத எண்ணெய்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அதிக நாட்கள் வைத்துப் பயன்படுத்தாமல், உடனுக்குடன் பயன்படுத்திவிட வேண்டும்.

 தவிட்டில் இருந்து கிடைக்கக்கூடிய ரைஸ்பிரான் (rise bran) ஆயில் உடம்புக்கு நல்லது'' 

''நல்லெண்ணெய்... நல்ல எண்ணெய்!''


''எண்ணெய்களிலேயே சிறந்தது, நம் நல்லெண்ணெய்தான்''  ''எள்ளில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெயில் சத்துக்களான விட்டமின்-பி6; ஆன்டி ஆக்ஸிடன்ட்டான விட்டமின்-இ; தாது உப்புக்களான இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம், செம்பு, கால்சியம் முதலானவை உள்ளன'',   


 ''இதில் சீசமின் (sesamin) என்னும் வேதிப்பொருள் இருப்பதுதான் இதன்   நிறம் மற்றும் மணத்துக்குக் காரணம். இந்த வேதிப்பொருள், சருமத்தின் முதுமையைத் தடுக்கக் கூடியது. இத்தகைய வேதிப்பொருளுக்காகத்தான் ஆலிவ் எண்ணெயை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். நல்லெண்ணெய் இருக்க, ஆலிவ் எண்ணெய் அவசியமே இல்லை''  

''திரும்பத் திரும்ப சூடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்ட எண்ணெயை அறவே தவிர்ப்பது நல்லது. ஓர் உணவைச் சமைப்பதற்கு எந்த அளவுக்கான எண்ணெய் தேவைப்படுகிறதோ, அந்த அளவுக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு, மீதி எண்ணெயைத் திரும்பவும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. உதாரணத்துக்கு, அப்பளம், வடை, வத்தல் போன்றவற்றுக்காக பயன்படுத்திய எண்ணெய் நிறையவே இருக்கும். குறிப்பாக கடைகளில் பஜ்ஜி, போண்டா, சமோசா என்று காலையிலிருந்து மாலை வரை அதே எண்ணெயிலேயே திரும்பத் திரும்ப எண்ணெயை ஊற்றிச் சுட்டுக்கொண்டிருப்பார்கள். கடையாக இருந்தாலும், வீடாக இருந்தாலும், இந்த எண்ணெயை வீணடிக்க மனமில்லாமல் மறுமுறை பயன்படுத்துவதுதான் வழக்கமாக இருக்கிறது. ஆனால், ஒரு தடவை சூடுபடுத்திய எண்ணெயை திரும்பச் சூடுபடுத்தும்போதுதான் அதிக பிரச்னை வருகிறது. வீடுகளாக இருக்கும்பட்சத்தில், சூடுபடுத்தாமல் பயன்படுத்தக்கூடிய இட்லி மிளகாய்ப்பொடி மற்றும் பருப்புப் பொடிகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். கடைகள் என்றால், கணக்குப் பார்க்காமல் அந்த எண்ணெயை குப்பைக்கு அனுப்புவதுதான் கஸ்டமர்களுக்கு நல்லது. 'எண்ணெய் வீணாகிறதே' என கவலைப்பட்டு, அதை மறுமுறை சூடு செய்து நோய்க்கு அழைப்பு வைத்து, இதற்காக செய்யும் மருத்துவச் செலவைவிட, மீதி எண்ணெயை வீணாக்குவதில் தவறே இல்லை''

வறுவலுக்கு ரீஃபைண்டு செய்யப்படாத கடலை எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். பொரிப்பதற்கு மக்காச்சோள எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், சோயா பீன்ஸ் எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெயைச் சூடுபடுத்தி சமைப்பது தவறு, சாலட்களுக்கு மட்டும் இதய நோயாளிகள் அல்லாதவர்கள் இந்த ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நல்லெண்ணெயைத் தாளிப்பதற்கும், தோசை சுடுவதற்கும், உணவில் நேரடியாகச் சேர்த்துக் கொள்வதற்கும் பயன்படுத்தலாம். வறுவல் போன்ற விஷயங்களுக்கு வேண்டாம். எந்த எண்ணெயாக இருந்தாலும், சரியாக காயாவிட்டாலும் ஆபத்து... அதிகம் காய்ந்தாலும் அதாவது புகையும் அளவுக்கு கொதிக்கவிட்டாலும் ஆபத்துதான்''  

''ரீஃபைண்டு செய்யப்படாத எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயைப் பயன்படுத்தும்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒரு நாளைக்கு ஒரு நபர் தன் உணவில் 10 முதல் 20 மில்லி வரை பயன்படுத்தலாம். நீரிழிவு, உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, இதய நோயாளிகள் கண்டிப்பாக 5 முதல் 10 மில்லிக்குள்தான் பயன்படுத்த வேண்டும்.  

Reference: http://www.vikatan.com/avalvikatan/2014-aug-26/food-special/97708.art

மறந்த உறவுகள் - என்றும் நினைவுகள்

அந்த காலத்தில் தாத்தா , பாட்டி
,சித்தி,சித்தப்பா,மாமா,அத்தை னு நிறைய உறவுகள் இருந்தது, இப்ப இந்த கால கட்டத்தில் நம்ம பக்கத்து வீட்டுல யாரு இருக்கானு   தெரியல. நாகரீகம் என்று சொல்லி உறவுகளை மறந்து விட்டோம்.பணத்துக்கு இருக்கும் மரியாதை உறவுக்கு இல்லை என்பதுதான் இதில் வேதனை.

பணத்தை நேசிக்காமல் நாம் நம் குழந்தைகளுக்கு உறவை நேசிக்க சொல்லி கொடுப்போம். மறந்த நம் உறவை நினைவு படுத்து வோம்.

Tuesday 9 August 2016

sumaithangi Kal,சுமைதாங்கி கல் (load bearer)?

Do you Know sumaithangi Kal (load bearer)?



பண்பை பறைசாற்றும்  சுமைதாங்கி கற்கள்,அந்தக்காலத்தில் சுமையுடன் பயணம் செய்யும் மக்கள் தன் பயண சுமையை அந்த கல்லில்வைத்துவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு பின்பு தன் பயணத்தை தொடருவார் .  இது தான் சுமைதாங்கி கல்.


சுமை தாங்கி கற்கள்


இந்த கல்லுக்கு ஒரு கதையும் உண்டு.கர்ப்பமாக இருக்கும் பெண் இறந்தால்
அந்த பெண் நெனைவாக  இந்த கற்களை வைத்தார்கள்.இந்த பழக்கம்
காலப்போக்கில் மறைந்து விட்டது.